1. படைக்கப்பட்ட உயிரினங்கள் இந்த பெரிய கடலில் விழுந்தார்கள். பிரம்மதேவர் அவர்களை பசி தாகத்துக்கு உள்ளாக்கினார்.'நாங்கள் தங்கி, உணவை உண்பதற்கு எங்களுக்கு ஒரு இடத்தை காட்டுங்கள்',என்று பிரம்மதேரிவடம் கேட்டார்கள்.
படைப்பு பற்றிய விளக்கம் தொடர்கிறது. படைக்கப் பட்டவர்களிடம் பசி மற்றும் தாக உணர்சியை ஏற்படுத்தினார் பிரம்மதேவர். அவர்கள் கடலில் விழுந்தார்கள். எந்தக் கடலில்?
'வாழ்க்கைக் கடலில்' அது வாழ்கை எனும் பெரிய கடல். அறியாமை, ஆசை, செயல்கள் ஆகியவற்றின் காரணமாக, எழுகின்ற துக்கமே அந்தக் கடலில் உள்ள தண்ணீர். கொடிய நோய், மூப்பு, மரணம், ஆகிய பயங்கர ஐந்துக்கள் அந்த கடலில் உலவுகின்றன. ஆரம்பமோ முடிவோ எல்லைகளோ இல்லாமல் அந்த கடலில் பரந்து கிடக்கிறது. இளைப்பாறுவதற்கு ஓர் இம்மியளவு இடம் கூட அங்கே இல்லை. உலகத்துடன் தொடர்பு கொண்டு, புலன்கள் கொண்டு வருகின்ற அற்ப சுகங்களே ஏதோ ஆறுதலாக உள்ளன. ஆயிரமாயிரம் தீமைகள் அலைகளாகச் சுழன்று அடிக்கின்றன. உலக இன்பங்களை அனுபவிப்பதற்கான தாகம் அந்த அலைகளின் வேகத்தை மேலும் கூட்டுகிறது. அந்த அலைகளால் அடியுண்டு, உயிரனங்கள் "ஐயோ, ஐயோ", என்று அலறி எழுப்புகின்ற கூக்குரல் எங்கும் நிறைந்துள்ளது. இந்த அவலங்கள் போதாதென்று அவர்கள் சிலவேளைகளில் நரகத்திலும் தள்ளப்படுகிறார்கள்.
ஆனாலும் இந்த வாழ்க்கைக் கடலை கடப்பதற்கு, ஒரு தோணி உள்ளது. உண்மை, நேர்மை, தானம், கருணை, அஹிம்சை, புலனடக்கம், சுயகட்டுப்பாடு, பொறுமை, ஆகியவை அதன் துடுப்புகளாக உள்ளன. தூயவர்களின் தொடர்பும் தியாகமும் அந்த தோணி செல்லும் பாதையாக உள்ளது. அந்தத் தோணியில் ஏறிசென்றால் மறுகரை ஆகிய மீண்டும் பிறப்பற்ற நிலையை அடையலாம்.
படைக்கப்பட்ட உயிரினங்கள் பசி, தாகம் போன்ற தேவைகளும் துன்பங்களும் நிறைந்த வாழ்க்கையை பெற்றார்கள் என்பது கருத்து.
பிரம்ம தேவன் அவர்களுக்கு ஒரு பசுவை கொண்டுவந்தார். 'இது எங்களுக்கு போதாது' என்று அவர்கள் கூறினார்கள். அவர் ஒரு குதிரையைக் கொண்டு வந்தார். அதற்கும் அவர்கள் 'இது எங்களுக்கு போதாது' என்று கூறினார்கள்.
3.பிறகு பிரம்ம தேவன் அவர்களுக்காக ஒரு மனிதனைக் கொண்டு வந்தார். அவனை கண்டதும் அவர்கள், 'ஆஹா! இவர் மனிதன் நிச்சயமாக சிறப்பாக படைக்கப்பட்டவன்' என்று கூறினார்கள். அவர்களிடம் பிரமதேவன் 'அவர்களுக்கு உரிய இடங்களில் புகுந்து கொள்ளுங்கள்' என்றார்.
4.நெருப்பு பேச்சாகி வாயில் புகுந்தது. காற்று பிராணனாகி மூக்கில் புகுந்தது. சூரியன் பார்வையாகி கண்களில் புகுந்தது. திசைகள் கேட்க்கும் தன்மையாகி காதுகளில் புகுந்தது. மூலிகைகளும் செடிகொடிகளும் முடிகளாகிய தோலில் புகுந்தன. சந்திரன் மனமாகி இதயத்தில் புகுந்தது. மரணம் அபானனாகிய தொப்புளில் புகுந்தது. தண்ணீர் விந்து வாகி குறியில் புகுந்தது.
5.பசியும் தாகமும் பிரம்மதேவனை அணுகி 'நாங்கள் இருவரும் தங்குவதற்கு ஒரு இடத்தை தெரிவியுங்கள்' என்று கேட்டுக்கொண்டன. அதற்கு பிரமதேவர், 'இந்த தேவர்களிடமே உங்களுக்கு இருப்பிடம் அளிக்கிறேன். அவர்களின் உணவில் பங்குதாரர்களாகவும் ஆக்குகிறேன்' என்றார். அதனால் எந்த தேவனுக்கு உணவு அளிக்கப்பட்டாலும் பசியும் தாகமும் அதில் பங்கேற்கின்றன.
இயற்கையின் பல்வேறு அம்சங்கள் தோன்றியதாகக் கண்டோம். இயற்கையின் அதே அம்சங்கள் மனிதனில் புகுவதாக கூறப்பட்டுகிறது. உதாரணமாக பிரம்மதேவனின் வாயிலிருந்து பேச்சு வெளிவந்தது. பேச்சிலிருந்து நெருப்பு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது இயற்கையின் அம்சமாகிய நெருப்பு பேச்சாகி வாயில் புகுந்தது.
இறைவனிலிருந்து பிரம்மதேவன்,பிரம்மதேவனிலிருந்து இயற்கை, இயற்கையிலிருந்து மனிதன், உயிரின, படைப்பு நிகழ்ததாக கூறப்படுகிறது.
படைப்பில் மனிதன் சிறந்தவன் என்ற கருத்தை இங்கே நாம் காண்கிறோம். மனிதன் சிறப்பாக படைக்கப்பட்டவன் என்கிறது.கட்டிடங்களில் தாஜ்மஹால் போல் கோயில்களில் மனிதனே சிறந்தவன்.
No comments:
Post a Comment